×

கார் விற்பனையாளரை வெட்டி ரூ.50 ஆயிரம் பறித்த ரவுடி கைது

தாம்பரம்: இரும்புலியூரை சேர்ந்தவர் சந்துரு (30). இவர், பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை 6 பேர் கடத்திச்சென்று, ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டி, பின்னர் பேடிஎம் மூலம் ரூ.50 ஆயிரம் பறித்துக்கொண்டு, சந்துருவை கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். இதுகுறித்து தாம்பரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து பிளிக்ஸ் கிளமண்ட், சந்தோஷ்குமார் ஆகியோரை ஏற்கனவே கைது செய்த நிலையில், நேற்று முன்தினம் அபிலாஷ் (30). என்பவர் தானாக முன்வந்து தாம்பரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்நிலையில் மற்றொரு ரவுடி கடப்பேரி உதயா (32). என்பவரை நேற்று கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட உதயா மீது தாம்பரம் காவல் நிலையத்தில் 13 வழக்குகளும், கோயம்பேடு காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், அம்பத்தூர் காவல் நிலையத்தில் 1 வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post கார் விற்பனையாளரை வெட்டி ரூ.50 ஆயிரம் பறித்த ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Chanduru ,Ironliur ,Dinakaran ,
× RELATED வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில்...